மருதமலையில் திருட்டு நடைபெற்ற இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் அல்ல - அரசு விளக்கம்
- by David
- Apr 03,2025
Coimbatore
நாளை மருதமலை முருகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் மருதமலையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இது பற்றி இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் கொடுத்துள்ளது. கோவை மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் திருடப்பட்ட வெள்ளி வேல் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் என தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை. மேலும், இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என கோவை மண்டல இணை ஆணையர் பி.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.