கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியன்று 28 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கழுத்தின் முன் பகுதியில் இரும்பிலான கம்பி குத்திய நிலையில் கை கால்களின் இயக்கம் பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 

வலிப்பு வந்தபோது கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்தியதாக அவருடன் வந்த உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனை முடிவில் கழுத்தில் வலது பக்கம் பாய்ந்த கம்பியானது மூச்சுக் குழாய் உணவு குழாய் மற்றும் ரத்த நாளங்களில் மிக அருகில் பாய்ந்து தண்டுவட எழும்பினை தொலைத்து தண்டுவடத்தில் குத்தி இருப்பது தெரிய வந்தது.

 

 

கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா அவர்களின் ஆலோசனைப்படி நரம்பியல் அறுவை சிகிச்சை இதய அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து கழுத்தில் பாய்ந்த கம்பியை நோயாளிக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அகற்றினர்.

 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி கை கால்கள் இயக்கம் சீரடைந்து அதன் பின்னர் வீடு திரும்பி உள்ளனர் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினர்களை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா வெகுவாக பாராட்டினார்.