ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை அடுத்து கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட முக்கிய இடங்களில் ரோந்து பணிகள் நேற்று இரவு நேரத்தில் அதிகரிக்கப்பட்டது. மேலும் நகருக்குள் நுழையும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உக்கடம் , செல்வபுரம் உட்பட நகரில் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே திடீர் சோதனைகள் நடத்தப்பட்டது.