ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 29ம் விளையாட்டு விழா
- by CC Web Desk
- Apr 17,2025
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் 29 ஆவது ஆண்டு விளையாட்டு போட்டிகள் வியாழன் அன்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
மாணவ மாணவிகள், பச்சை, மஞ்சள், சிவப்பு ,நீளம், என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 100 மீட்டர் 200 மீட்டர் 800இ, மீட்டர் 1500 மீட்டர், நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ,தட்டுயெறிதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வுக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த கால்பந்து தேசிய நடுவர் சூசைநாதன் மார்ட்டின் கலந்து கொண்டார்.
இவ்விளையாட்டு விழாவில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் விளையாட்டு ஆண்டு அறிக்கை வாசித்தார். அதையடுத்து எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், சிறப்பு விருந்தினர் சூசை நாதன் மார்ட்டின் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
இவ்விளையாட்டு விழாவில் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தை மாணவ மாணவியர் பிரிவில் மஞ்சள் நிற அணியினர் பெற்றனர் . ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற மஞ்சள் நிற மாணவர் மாணவியர் அணியினருக்கு சிறப்பு விருந்தினர் சூசைநாதன் மார்ட்டின் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர் கோப்பையை வழங்கினர்.
மாணவர் பிரிவில் தனிநபர் பட்டத்தை இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவன் எஸ்வந்த் மற்றும் மாணவியர் பிரிவில் இரண்டாம் ஆண்டு ரோபோடிக்ஸ் துறை மாணவி நட்சத்திரா ஆகியோர் தனி நபர் பட்டத்தை வென்றனர்.