கோவை மாநகரத்தின் முக்கிய பகுதிகளான காந்திபார்க் ரோடு, தடாகம் ஆனைக்கட்டி ரோடு, கவுலி ப்ரவுன் ரோடு மற்றும் மருதமலை மெயின் ரோடு சந்திக்கும் லாலி ரோடு சந்திப்பில் ரூ.110 -120 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு இப்போது வரை இத்திட்டம் துவங்க தாமதமாகி வருகிறது.

அண்மை தகவல்கள் படி, இந்த பாலம் கட்ட தேவைப்படும் நிலங்களை பிற அரசு துறைகளிலிருந்து மாநில நெடுஞ்சாலையின் கோவை பிரிவுக்கு நில மாறுதல் செய்யும் பணிகள் தாமதம் ஆகி வருவதாலும், இந்த மேம்பால திட்டத்திற்கு தமிழக அரசின் நிர்வாக ஒப்புதல்  இன்னும் வழங்கப்படாமல் உள்ளது இத்திட்டம் தாமதமாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நில மாற்றம் தொடர்பாக நெடுஞ்சாலை துறை மாற்றங்கள் செய்து புதிய அறிக்கை வழங்கவேண்டும். இது இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு சொந்தமான நிலம், வனக்கல்லூரிக்கும் வேளாண் கல்லூரிக்கும் சொந்தமான நிலங்களை கையகப்படுத்த வேண்டி உள்ள நிலையில், தற்போது இந்த மேம்பால திட்டத்தின் வடிவமைப்பு, நிலத்தேவை உள்ளிட்டவைகளில் சில மாற்றங்களை நெடுஞ்சாலை துறை செய்து வருகிறதாகவும் தெரியவருகிறது. வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவதால் அதிக அளவில் நிலம் கையகப்படுத்த தேவை இருக்காது என கருதப்படுகிறது.

PC : The Hindu