தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்கள் மாநாடு வரும் ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. 

துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்துவதாக பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில், ஏப்ரல் 25ல் ஆளுநரை எதிர்த்து ஊட்டியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.