கோவை பீளமேடில் உள்ள ஜி.வி. ரெசிடெண்சி பகுதியில் நேற்று நடைப்பயிற்சி செய்ய சாலையில் நடந்து சென்ற கவுசல்யா எனும் பெண்ணை காரில் மெதுவாக பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தில் அணிந்த தங்க சங்கிலியை பறிக்க அவரை காருக்கு வெளியே கை நீட்டி தர தரவென இழுத்தது சிசிடிவியில் பதிவாகி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. 



வீடியோ வெளியான 24 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் 2 பேரையும் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். 



செயின் பறிக்க முயன்றவர் சக்திவேல் என்பதும் காரை ஒட்டி வந்தவர் அபிஷேக் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. திருட்டுக்காக உபயோகப்படுத்த பட்ட டாக்ஸி சக்திவேல் உடையது என்பது தெரியவந்துள்ளது.