கோவை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான டவுன்ஹால் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 

 

அதன் படி இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட டவுன்ஹால், பெரியகடை வீதி, ராஜ வீதி ஆகிய இடங்களில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

 

அதன் பின்னர் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். 

 

விரைவில் இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிகிறது.