கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5. மண்டலங்களின் 100 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அதிகளவிலான மரக்கன்றுகள் நடப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று தினம் மேற்கு மண்டலம், வார்டு எண்.36, 37,38,39 மற்றும் 40க்குட்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான 48 இடங்களில் சுமார் 2000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடும் பணியினை, வீரகேரளம் சாலை, கே.ஆர்.கே.நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார்.

இதில் வேம்பு, பூவரசன், மருதம், புங்கன், இலுப்பை, மற்றும் வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்படவுள்ளது. மேலும், வார்டு எண்.39க்குட்பட்ட காயத்திரி கார்டன் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், துவக்கி வைத்து, மரக்கன்று நட்டு வைத்தார்.