பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்று மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பாஜகவின் கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை இன்று கோவையின் 
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இறுதிக் கட்ட பிரச்சாரம் செய்தார்.

இதற்கு பின்னர், அவர் தனது எக்ஸ் தளத்தில்:-

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும், ஜூன் 4ஆம் தேதியிலிருந்து 500 நாட்களில், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியின், அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட, குடிதண்ணீர்ப் பிரச்சினை, உட்கட்டமைப்பு, விசைத்தறி, விவசாயப் பிரச்சினைகள் என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் ஆதரவுடன்,  தமிழக பாஜக சார்பாக வழங்கப்பட்டுள்ள நூறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, கோவையை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.