தியாக திருநாள் என இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

கோவையில் ஜாக் பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். கோவை, குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் வளாகத்தில் ஜாக் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆடுகள் வரத்து நல்ல அளவில் இருந்துள்ளது. நேற்று மட்டும் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.