கோவை - ஈரோடு இடையே இயக்கப்படும் மேமு ரயில் சேவை நேரத்தில் வரும் ஞாயிறு முதல் சிறு மாற்றம்  

கோவை, ஈரோடு இடையே இயக்கப்படும் மேமு ரயில் சேவையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது தென்னக ரயில்வே. 

அதன்படி இதற்கு முன்னர் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, தொட்டியா பாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர், வஞ்சிபாளையம், சோமனூர், சூலூர் ரோடு, இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு, ஆகிய நிலையங்கள் வழியாக வந்து இறுதியாக காலை 10.10. மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடையும் ரயில் இனி காலை 7.45 மணிக்கு புறப்படும்.

திருத்தப்பட்ட நேரம் நிலையம் ரீதியாக : 

போத்தனூர் - சென்னை இடையே சிறப்பு ரயில் 8.6.2025 (ஞாயிறு) மற்றும் 9.6.2025 இயக்கப்படவுள்ளது.

8.6.25 இரவு 11.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும். அதன் பின்னர் அதே நாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையம் வந்தடையும். இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்து செல்லும்.