கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா இணைந்து 7-வது ஆண்டாக நடத்தும் கோவை புத்தக திருவிழா ஜூலை 21-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் துவக்கவிழா இன்று நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் வெ.பாலகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர்  துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

 கண்காட்சியில் 330 அரங்குகளில் லட்சக்கணக்கான தலைப்புகளில், புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம்பெற உள்ளன.