கோவையில் சிறுத்தைப்புலியிடம் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பிய வளர்ப்பு நாய்
- by CC Web Desk
- Jun 15,2025
Coimbatore
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், மாங்கரை சோமையனூர் திருவள்ளூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
நேற்று இரவு சோமையனூர் பகுதியில் உலாவந்த ஒரு சிறுத்தைப்புலி அப்பகுதியில் உள்ள சேகர் என்பவர் வளர்த்து வரும் நாயை துரத்தி உள்ளது. நாய் சிறுத்தைப்புலியிடம் இருந்து தப்பி சேகரின் வீட்டு வளாகத்தில் நுழைந்த நிலையில் நாயை பின்தொடர்ந்து வந்த சிறுத்தைப்புலி அதை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. ஆனால் நாய் அதனிடமிருந்து தப்பி ஓடியது.
இச்சம்பவம் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.