கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என் கோவை கலெக்டர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார். 

மேலும் மண் / வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண் / வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.