கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வந்த கவிதா எனும் பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதில் காயமடைந்த கவிதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

மேலும் ஆசிட் வீச்சு சம்பவத்தை தடுக்க முயன்ற வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

 

 இந்த சம்பவத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என தகவல்கள் கூறுகின்றன