கோவையில் நாளை (7.6.24) பராமரிப்பு பணிகளுக்காக கீழ்கண்ட 2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

 

அதன் காரணமாக இந்த 2 துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

 

கள்ளிமடை துணை மின் நிலையம்:

 

காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசி டென்ஸி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர். நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை, இந்திரா நகர்.

 

அரசூர் துணை மின் நிலையம்:

 

அரசூர் துணைமின் நிலையம்: அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், பொன்னாண்டம் பாளையம் மற்றும் மோளபாளையம்.