பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி 6 தங்கம்,12 வெள்ளி பதக்கங்கள் வென்று, இறுதியாக போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

 

இதில் நம் மாநில அணியில் விளையாடிய கோவையை சேர்ந்த 9 வீரர்,வீராங்கனைகள் 2 தங்கம்,7 வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

 

கோப்பையுடன் கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் கோவை திரும்பிய வூசு வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் தமிழ்நாடு வூசு சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் தமிழ்நாடு வூசு சங்கத்தின் செயலாளர் ஜான்சன்,கோவை மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் பயிற்சியாளர் ராபர்ட் ஆகியோர் உடனிருந்தனர்.

 

வெற்றி பெற்று கோவை திரும்பிய தமிழ்நாடு அணிக்கு தமிழக வூசு சங்க தலைவர் அலெக்ஸ் அப்பாவு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.