கோவை சிறுவாணி சாலை பேரூர் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

 

இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பேரூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் வங்கியின் ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கோவைப்புதூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், வங்கிக்கு உள்ளே சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

 

விசாரணையில் வங்கியில் இருந்த பேட்டரி யூனிட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததும், இதில் பிரதான மின் பெட்டியிலும் தீ பிடித்ததால் வங்கியில் இருந்த கணினிகள், இருக்கைகள், பாஸ் புக் அச்சடிக்கும் இயந்திரம், பிரிண்டர்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது. 

 

இச்சம்பவம் தொடர்பாக பேரூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.