40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனத்திற்கு : நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக புற்றுநோய் ... முன்னெச்சரிக்கை அவசியம்
- by admin
- Oct 23,2025
மார்பக புற்றுநோய் நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் 2 பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது.
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும் என கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனை மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர் ரூபா பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது : -
பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.
பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி(வலியுடன் அல்லது வலியில்லாமலும்), மார்பகக் காம்புகளில் கசிவு, மார்பகக்காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் எதாவதொன்று இருந்தாலோ, இரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.
இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனையாகும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களை கூட முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம்.
கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம்.
மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் அளவிற்கு நவீன சிகிச்சை முறை வந்து விட்டது. கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் தேர்ந்த மருத்துவ குழுவினரை கொண்ட மார்பக பரிசோதனை மையம் ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது. உலகின் தலைசிறந்த, அதிநவீன மருத்துவ வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
வித்தியாசத்தை துல்லியமாக பார்க்க உதவும் முப்பரிமாண வசதியுடன் கூடிய மேமோகிராம் பரிசோதனை கருவி, திசு விறைப்பு தன்மையை அளவிட உதவும் அல்ட்ராசோனோகிராபி இயந்திரம், 3T எம்ஆர்ஐ, வேக்குவம் அசிஸ்டட் பயாப்சி ஆகியவை அவற்றில் அடங்கும்.
உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை (அக்டோபர்) முன்னிட்டு பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3 முதல் 31ம் தேதி வரை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் நடக்கிறது. இதில் ரூ.3400 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.1200 சலுகை கட்டணத்திலும், ரூ.1100 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.600 சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இத்தகைய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியலாம். பாதிப்பு நிலை துவக்கத்திலேயே கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைகள் மேற்கொண்டு மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலாம் என்று டாக்டர் ரூபா அவர்கள் கூறினார்.
மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும், போன் : 7418887411 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.







