கோவை விமான நிலையத்தில் இருவரிடமிருந்து ட்ரோன்கள் பறிமுதல்
- by David
- Jun 25,2025
Coimbatore
சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய வகை ட்ரோன்களை எடுத்துகொண்டு கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து 2 வந்த பேரை விமான நிலையத்தில் இருந்த சுங்க துறை அதிகாரிகள் பிடித்தனர்.
நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த சங்கர்குரு சுப்ரமணியன் மற்றும் ஜாகிர் ஹுசைன் என்பவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான புதிய வகை ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்களின் பைகளில் வைத்து அவர்கள் இந்த சீன தயாரிப்புகளை எடுத்துவந்துள்ளனர்.
இந்திய அரசு பிற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ட்ரோன்களை இறக்குமதி செய்ய 2022ல் விதித்தது குறிப்பிடத்தக்கது.