நிரம்புகிறது பில்லூர்... பவானி ஆற்றில் 3000 கன அடி நீர் வெளியேற்றம்!
- by David
- Jun 25,2025
Coimbatore
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பில்லூர் அணை 100 அடி கொள்ளளவு கொண்டது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் அணை தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது. தற்போது நீர் வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 96 அடியை எட்டியுள்ள நிலையில், பவானி ஆற்றில் 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று இரவு அணை நிரம்பலாம் என்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது.