தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளின் பள்ளிகளுக்கு உற்சாகமாக மீண்டும் வருகை தந்தனர்.

அந்த வகையில் கோவையில் திறக்கப்பட்ட பள்ளிகளில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை  ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.குறிப்பாக சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல வேடமிட்ட நபர்கள் மாணவ மாணவிகளை வரவேற்று  இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.