கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண் 56க்கு உட்பட்ட சிவலிங்கபுரம் பிரதான சாலையில், ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 25 எண்ணிக்கையிலான தெருவிளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார்.

அதைதொடர்ந்து, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மரக்கன்றுகளையும் அவர் நட்டு வைத்தார். இதை தொடர்ந்து  மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படவுள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.