குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க கோரி சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம்
- by CC Web Desk
- Jun 10,2025
Coimbatore
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரில் கருப்பு உடை அணிந்து இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.என்.ராமசாமி தலைமை தாங்கினார், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கே.அருணகிரி துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ஆர்.ராஜகோபால் பேசினார்.
அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.7,850 அகவிலைபடியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.