மே 1, 2025 முதல் புது ஏ.டி.எம். கட்டணங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இலவச பரிவர்த்தனை அளவை வாடிக்கையாளர்கள் கடந்த பின்னர் ஒவ்வொரு முறை அவர்கள் ஏ.டி.எம்.களை பயன்படுத்தும்போதும் அவர்களிடம் இருந்து ரூ.23 வசூலிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிலும், பிற வங்கியிலும் பணம் எடுக்கும்போதும், கணக்கில் உள்ள தொகை இருப்பை (பேலன்ஸ்) காண ஏ.டி.எம்.மை பயன்படுத்தும்போதும் வசூலிக்கப்படும். இது இந்தியா முழுவதும் உள்ள சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ஏ.டி.எம்.களை பராமரிப்பது, பாதுகாப்பான சேவை வழங்குவதற்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க இவ்வாறு கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளரின் சொந்த வங்கியில் ஒவ்வொரு மாமும் 5 முறை இலவசமாக பணம் எடுக்கவும், கணக்கில் இருப்பு தொகையை காணவும் முடியும்.மெட்ரோ நகரங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 3 முறை இலவசமாகவும், மெட்ரோ அல்லாத நகரங்களில் மாதம் 5 முறை இலவசமாகவும் பணம் எடுக்க/ தகவல் அறிந்துகொள்ள முடியும். இப்போது வரை இந்த அளவை கடந்த பின்னர் ரூ.21 வசூலிக்கப்பட்டு வருகிறது.

2022 முதல் இது நடைமுறை படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் மே 1ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி இந்த மாற்றத்தை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.