கோவை மாநகரில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10.1 கிலோமீட்டர் அவிநாசி சாலை மேம்பால பணிகள் தற்போது 93% நிறைவு பெற்றுள்ளது. 

நேற்று மேம்பாலத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் சில இடங்களில் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் சரவணன் ஆய்வு நடத்தினார். குறிப்பாக கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் பிரதான பகுதி மற்றும் அந்த வழியே வரக்கூடிய ஏறுதளத்தை அவர் ஆய்வு செய்து, பணிகள் தரமாக நடந்துள்ளதாக அவர் கூறினார்.

இதை தொடர்ந்து அவர் மேம்பாலத்தில் வளைவு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு மேம்பாலத்தில் பயணிக்கும் போது முன்கூட்டியே தெரியும் வகையில் இருக்குமாறு அமைப்புகள் இருக்கவேண்டும், அதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்.

மேம்பாலப் பணிகள் முடிந்த பின்னர், சாலை பாதுகாப்பு ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னர் தான் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

கிட்டத்தட்ட பெரும் பணிகள் நிறைவேறி உள்ளது. நவ இந்தியா மற்றும் ஹோப்ஸ் பகுதியில் பணிகள் உள்ளன. சில இடங்களில் ஏறு தளம்/இறங்கு தளப்பணிகள் நடந்து வருகிறது.