சலோ எல்.ஓ.சி. என்ற புதிய சமூக அமைப்பு, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் ஒரு மாபெரும் புல்லட் பைக் பேரணியை இன்று ஆரம்பித்து உள்ளது. 

கேரளாவின் ஆன்மீகத் தலம் காலடியில் இருந்து தொடங்கி, ஜம்மு - காஷ்மீரின் எல்லை அருகே உள்ள டீட்வாலில் உள்ள சாரதா யாத்ரா க்ஷேத்ராவில் நிறைவடையும் இந்தப் பேரணி, சுமார் 3600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க உள்ளது. 

'துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள்' என்ற முழக்கத்துடன், இந்த பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பங்கேற்றன. கோவை வழியே இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் இன்று சென்றனர்.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அப்பகுதியில் அமைதி நிலை திரும்ப வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தியும், தீவிரவாதத்தை கண்டித்தும் இந்த அமைதிப் பயணம் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்த பயணம் ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூன் 12ம் தேதி முடிவடைகிறது.