கோவையில் அரசின் 'மாணவர்கள் விடுதி'யில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரங்கள் உள்ளே
- by David
- Jun 10,2025
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென தனித்தனி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சேர தகுதி உள்ள மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் திறப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதன்படி பள்ளி மாணவ மாணவியரை பொறுத்தவரை 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முதலும், கல்லூரி மாணவ மாணவியரை பொறுத்தவரை பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் ஆகிய கல்வி பிரிவுகளை சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்கலாம்.
இந்த மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்லூரி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். (இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது).
தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில்
18.6.2025க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2025 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.