கோவையில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை பற்றி அறிந்துகொள்ள பொருட்காட்சி வழிவகுக்கும் - அமைச்சர் சாமிநாதன்
- by David
- May 01,2025
கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று முதல் ஜூன் 14ம் தேதி வரை அரசு பொருட்காட்சி நடைபெறுகிறது. இதை இன்று (1.5.25/வியாழன்) செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், கலெக்டர்பவன்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் பல முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இதற்கடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று துவங்கியுள்ள பொருட்காட்சி, ஜூன் மாதம் 14ம் தேதி வரை நடைபெறும் என கூறினார். சென்ற வருடம் பொருட்காட்சி நடைபெற்ற போது 1.68 லட்சம் மக்கள் அதில் கலந்துகொண்டனர் எனவும், இதனால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்தது எனவும் கூறிய அவர், இம்முறை அதை போலவே அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், அரசு பொருட்காட்சியில் 31 தமிழக அரசு துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை எப்படி பெற்றுக்கொள்வது என்பதை தெரிந்து கொளளவும், கோவை மாநகராட்சி செயல்படுத்தும் திட்டங்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ளவும் இந்த பொருட்காட்சி வழிவகை செய்யும். இதை பற்றி மக்களுக்கு விளக்க அதிகாரிகள் தயாராக உள்ளனர். எனவே பொது மக்கள் நேரில் வந்து இதை தெரிந்து கொள்ளவேண்டும், என அமைச்சர் பொதுமக்களை கேட்க்கொண்டார்.