தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகே அமைந்துள்ள சுற்றுலா தளங்களான கோவை குற்றாலம், பரளிக்காடு - பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா, வால்பாறையில் உள்ள கவி அருவி ஆகியவை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்றுமுதல் மூடப்பட்டுள்ளன.

தற்போது உள்ள தகவல் படி, மே 30 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை இருக்கும் எனவும் வரும் சனிக்கிழமை (31.5.25) முதல் மழை மெதுவாக குறையும் எனவும் தெரியவருகிறது. எனவே மழை நின்ற பிறகு, பாதுகாப்பான சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் சுற்றுலா நடவடிக்கைகள் தொடரும். அதுவரை கோவை குற்றாலம் பகுதி உள்பட பிற சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல தடை தொடரும். இன்று கோவை குற்றாலத்தில் பெய்த கனமழையால்  இன்று அந்த பகுதியில் நீர் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் அந்த இடம் ஆக்ரோஷமாக காணப்படுகிறது.

படம் : Thangappa/Media 7