கோவை மாவட்டத்தில், 1434 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி, வருவாய் தீர்வாயக்கணக்கு முடிவு பற்றிய நிகழ்ச்சி நாளையுடன் (28.5.25) நிறைவடைகிறது.

கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகாக்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சிகளின் போது பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, நில அளவை, ஜாதிச்சான்று, வருவாய்சான்று,முதியோர் உதவித்தொகை, மகளிர் ஊக்கத்தொகை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக, கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.

வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில், கோவை மாநகராட்சி 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.சாந்தி சந்திரன், பாப்பநாயக்கன்புதூர் (P.N.புதூர்) பகுதியில் வாழும் மக்களுக்கு நில வகைமாற்றம் செய்து பட்டா, குடிசை மாற்று வாரிய பட்டா, ரேசன் கடைகள் மாற்றுவது மற்றும் விதவைகள்,முதியோர், முதிர்கன்னிகள்,மாற்றுதிறனாளிகள், மகளிர் உரிமை தொகை, பட்டா  பெயர் மாற்றம் ஆகியவைகளை மனுக்களாக ஜமாபந்தி அதிகாரியான விமான நிலைய ஓடுதள விரிவாக்க சிறப்பு வருவாய் அலுவலர் (DRO) வித்யா- விடம் வழங்கினார். இந்த மனுக்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்கப்படும், தீர்வு வழங்கப்பட உள்ளது.