கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் ஏற்பட மின் கசிவால் உருவான தீ பரவிய அதே நேரத்தில், வீட்டின் சமயலறையில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த விவரம் பிணவருமாறு :-

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ்.  இவர் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த வீட்டில் வசித்துவருகிறார்.

சம்பவம் நடைபெற்ற நாளில் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு மாணிக்கராஜ் வெளியே சென்று உள்ளனர். அப்போது இரண்டாவது மாடியில் மின் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்து உள்ளது. இதை கண்ட அருகில் வசிப்பவர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு வீடு தீப் பற்றி கொண்டு எறிந்த நிலையில், திடீரென அங்கு இருந்த வீட்டின் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் தீ விபத்து சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.