அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் ஜூலை 7ம் தேதி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்கிற முழக்கத்துடன் தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார் என அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சுற்றுப்பயணத்தின் முதல் கட்டம் 7.7.2025 முதல் 21.7.2025 வரை இருக்கும் எனவும் இந்த நாட்களில் அவர் கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.

7.7.2025 அன்று அவர் கோவை மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு செல்கிறார். அதை தொடர்ந்து கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட பகுதிகளுக்கு செல்கிறார்.