கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2000 வரை கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சமீபத்தில் மீண்டும் சந்தித்து தங்களின் கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் மாணவர்கள் தென் ஆப்ரிக்கா,லண்டன்,மலேசியா,துபாய் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டனர்.

நீண்ட வருடங்களுக்கு பின்பு தங்களது ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்த கொண்டதோடு,மீண்டும் வகுப்பறைகளில் அமர்ந்து வருகை பதிவேடுகளை ஆசிரியர் வாசிக்க தங்களின் வருகையை 'யெஸ் சார்' என மகிழ்வுடன் அறிவித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து மாணவர்கள்  தாங்கள் படித்த பழைய வகுப்பறைகளை நினைவு கூறும் வகையில் பார்த்துச் சென்றனர்.