வரும் வார இறுதியில் கேரளா செல்ல திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு தான் இந்த தகவல்
- by CC Web Desk
- Jun 25,2025
News
கேரளாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் இன்று (25.6.25) வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின் படி கேரளாவின் பல பகுதிகளில் ஜூன் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இடுக்கி, மலப்புரம், வயநாடு, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் 26.6.2025 அன்று கனமழை பெய்யும் சூழல் உள்ளது.
அதற்கு மறுநாள் (27.6.2025) மற்றும் அதற்கடுத்த நாள், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும் சூழல் உள்ளது.
எனவே இந்த வார இறுதியில் கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், வானிலை அறிவிப்பை கவனித்து, அதன் படி முடிவை மக்கள் எடுக்கலாம்.