திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக காரில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி சென்ற முதலமைச்சர் அங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து அங்கிருந்து பெருந்துறை விஜயமங்கலத்தில் நடக்கும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் அதே பகுதியில் நடக்கும் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து சாலை மார்க்கமாக சேலம் மாவட்டம் மேட்டூருக்கு செல்கிறார்.