கோவை, மருதமலை அடிவாரத்தில் இறந்த பெண் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஒரு கருவும், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது இன்று செய்தியானது. இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் வனத்துறையினரின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கோவை மருதமலை வனப்பகுதி அருகே உள்ள சோமையாம்பாளையம் பஞ்சாயத்து பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் இனி குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளுக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவது முற்றிலுமாக தடுக்க அங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.