கோவையில் 3ம் நாளாக நடைபெற்ற ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
- by CC Web Desk
- Jun 11,2025
Coimbatore
தங்களுக்கு அறிவிக்கப்பட்ட நியாயமான சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும் அரசாணை 62ன் படி சம்பளம் வழங்கப்படவேண்டும் என கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தொடர்ந்து 3ம் நாளாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வெளியே போராட்டம் செய்தனர். அவர்கள் தங்கள் போராட்டத்தில், ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகமே அவர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.