அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய கோவை பள்ளி மாணவர்கள்
- by CC Web Desk
- Jun 13,2025
Coimbatore
நேற்று மதியம் 1.40 மணி அளவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினருடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 229 பேர் மற்றும் 12 விமான குழுவினர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக கோவையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று அஞ்சலி செலுத்தினர். பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் என திரளானோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.