கோவையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!
- by David
- May 01,2025
வரும் 6ம் தேதி முதல் கோவையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 4 தோ்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 3,935 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பை கடந்த 25 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு, அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டிருப்பவா்கள் இந்தத் தோ்வுக்கு வரும் மே 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 6 ஆம் தேதி தொடங்குகின்றன.
இந்த வகுப்புகள் தமிழ், ஆங்கில வழியில் துறைசாா்ந்த நிபுணா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இலவச வைஃபை வசதி, ஸ்மாா்ட் போா்டு, தோ்வு தயாரிப்புக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, வாரத் தோ்வுகள், முழு மாதிரித் தோ்வுகள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த பயிற்சியில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், மாணவா்கள் தங்களுக்குத் தேவையான பாடக் குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 உடன் வரும் 6 ஆம் தேதி, மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் அருகில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.