தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை மற்றும் அண்ணாமலைப் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நெருங்குகிறது இறுதி நாள்!
- by CC Web Desk
- Jun 13,2025
2025 - 2026 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண்பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 6921 (அரசாங்க கல்லூரிகளுக்கு 2516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு 4405 இடங்களும் = 6921 இடங்கள்) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் 340 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
09.05.2025 முதல் இணையதள வாயிலாக http://tnau.ucanapply.com இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பெற்று வருகிறது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 16.06.2025 இறுதி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணாக்கர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 16.06.2025க்கு முன்பு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் (email): ugadmissions@tnau.ac.in மூலமாகவும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9865703537 மற்றும் 9442029913 என்ற அலைபேசி எண்களிலும், மின்னஞ்சல் (email): agridean2015@gmail.com மூலமாகவும் வாரநாட்களில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்புகொள்ளலாம்.