தென் மேற்கு பருவமழையின் தாக்கம் கோவை மாவட்டத்தில் இருப்பதால் தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகே அமைந்துள்ள சுற்றுலா தளங்களான கோவை குற்றாலம், பரளிக்காடு - பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா, வால்பாறையில் உள்ள கவி அருவி ஆகியவை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.

இத்துடன் வெள்ளியங்கிரி மலை தொடர்களில் மழை பெய்து வருவதால் மலையேற்றத்திற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு அனுமதி இல்லை. 

கடந்த மூன்று நாட்களாக தொடர்மழையும் சின்ன கல்லாறு, ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதி கனமழையும் பெய்து வருகிறது. இதனால் வால்பாறைக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வால்பாறையில் உள்ள கவி அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அறிவியல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.