கனமழை தாக்கம் கோவை மற்றும் நீலகிரி மாவட்டபகுதிகளில் நேற்றும் இன்றும் அதிகம் உள்ளது. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் முதலாம் கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் கோத்தகிரி சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மரக்கிளைகளை இயந்திரங்கள் வாயிலாக வெட்டி எடுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.