கனமழையால் சிறுவாணி அணையில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!
- by CC Web Desk
- May 26,2025
Coimbatore
தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கேரளாவில் அமைந்துள்ள கோவைக்கான முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையில் இந்த கனமழை தாக்கத்தின் எதிரொலியால் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையில், மழை காரணத்தால் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து தற்போது நீர்மட்டம் 26.60 அடியாக உள்ளது. சிறுவாணியின் அடிவாரத்தில் 128 மி.மீ. மழையும் , அணைகட்டு பகுதியில் 120 மி.மீ. மழை பொழிவும் பதிவாகி உள்ளது. அடுத்த சில நாட்கள் மழை இப்படியே பெய்தால் அணையின் நீர்மட்டம் கன விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கலாம்.