நாளை கோவை மாநகராட்சியின் 'மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்' நடைபெறுமா?
- by CC Web Desk
- Jun 02,2025
Coimbatore
கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை (27.5.2025) நடைபெறவேண்டிய இக்கூட்டம் ரத்தானது. இதற்கடுத்த செவ்வாய்க்கிழமை நாளை (3.6.2025) வருகிறது. எனவே அன்றைய தினம் இக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நாளை மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெறவிருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணத்தால் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.