வான்வெளி, பாதுகாப்பு துறைகளை சேர்ந்த கோவை எம்.எஸ்.எம்.இ.க்கள் பயன்பெறும் வகையில் உருவாகிறது அதிநவீன மையம்
- by CC Web Desk
- Jun 28,2025
வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் கோவையை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) பயனடையும் வகையில், பொது பொறியியல் வசதிகள் வளாகம் ஒன்று தமிழ் நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) மற்றும் டாடா டெக்னாலஜிஸ் சார்பில் கோவையில் அண்ணா பல்கலையின் மண்டல வளாகத்தில் 5 ஏக்கர் நிலத்தில் 2 கட்டங்களாக உருவாகிறது.
அரசு- தனியார் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்படும் இந்த வளாகத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான சிறந்த கட்டமைப்புகள் (ஆய்வுக்கூடங்கள், இயந்திரங்கள், சோதனை கருவிகள்) வழங்கப்படும். டாடா நிறுவனம் சார்பில் ரூ.300 கோடி மதிப்பிலான முதலீடு இதன் மேல் செய்யப்படுகிறது.
இங்குள்ள வசதிகளை கொண்டு எம்.எஸ்.எம்.இ, நிறுவனங்கள் செயல் மாதிரிகளை உருவாக்க, சோதனை செய்து பார்க்க முடியும். இந்த மையத்தில் துறைகளுக்கான அதிநவீன இயந்திரங்களை குறைவான கட்டணத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பல்கலையின் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் உபயோகப்படுத்தலாம். அடுத்த 4 மாதங்களில் இதற்கான பணிகளை முடித்து திறந்துவைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.