கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கற்பித்தல் முறைகளை மேம்படுத்துதல் மற்றும் புதுமைகளை வளர்ப்பது குறித்த மூன்று நாள் ஆசிரிய மேம்பாட்டுப் பயிற்சியை முடித்த வெவ்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த 27 பேராசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவை நடத்தியது.

பொறியியல் கல்வியில் வடிவமைப்பு சிந்தனையை மேம்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டு கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி உடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சென்னையின் வடிவமைப்பு சிந்தனைப் பள்ளியால் இந்த பயிற்சி வழங்கப்பட்டது.

ந்த நிகழ்விற்கு கேபிஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஆர். தேவிபிரியா தலைமை தாங்கினர். வடிவமைப்பு சிந்தனைப் பள்ளியின் முதன்மை ஆலோசகர் மற்றும் வடிவமைப்பு சிந்தனைப் பயிற்சியாளர் ஹேமா நாராயணன் முக்கியப் பங்கு வகித்தார்.

இதன் மூலம் நடைமுறை சிக்கல்களை தீர்த்து புதுமையான கற்றல் சூழலுக்கு வழிவகுக்கும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் வடிவமைப்பு சிந்தனையை வகுப்பறைகளில் ஒருங்கிணைத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டன.