டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 27வது ஆண்டு விழா
- by CC Web Desk
- May 09,2025
பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 27வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் முதலவர் பி.கோவிந்தசாமி ஆண்டு அறிக்கையை வழங்கினார். இந்த நிகழ்வில்பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் – சைபர் பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கமலேஷ் சிங், தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், தொழில்துறைகளின் தேவை தினந்தோறும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதையும், அந்த மாற்றங்களை புரிந்து கொண்டு மாணவர்கள் தங்களை தக்கவாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கினார். தோல்வி என்பது ஒருபோதும் தோற்கடிப்பு அல்ல; பல சமயங்களில் அது வெற்றியை விடவும் அதிகமான அறிவை வழங்கும் வலிமையான ஆசிரியராக விளங்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அசோக் ராஜமாணிக்கம், முன்னாள் மாணவர் (2002-2006) ECE, தொழில்நுட்ப திட்டம் & விநியோக மேலாளர், பிரிட்டிஷ் டெலிகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட், பெங்களூர், கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், கல்லூரியில் கல்வி பயணத்தை முழுமையாக பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும், அதே சமயம் நேரத்தையும் அனுபவங்களையும் சிறப்பாக நினைவுகூரவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் நான்காம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் பயிலும் அ. சுந்தரேஸ்வரா என்ற மாணவருக்கு ரூ.20,000/- ரொக்கப் பரிசுடன் "அருட்செல்வர் விருது" வழங்கப்பட்டது.
மேலும் கல்லூரியின் "சிறந்த மாணவன்/மாணவி "எனும் விருது 9 இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ.10,000/- மதிப்பிலான ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது. எம்.சி.ஏ. இறுதியாண்டு பயிலும் மாணவி ஒருவருக்கு தலா ரூ.5000/- ரொக்கப் பரிசுடன் "சிறந்த மாணவி" விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் சி.ராமசாமி; கல்லூரியின் முதல்வர் பி.கோவிந்தசாமி, ஒட்டுமொத்த கல்வி ஒருங்கிணைப்பாளர்,எஸ் .நாகராஜன், பொது தொடர்பு அலுவலர், பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.