நாளை கோவை மாநகரில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை ஏற்படவுள்ளதாக தகவல் இல்லை.

அதே சமயம் மாவட்ட பகுதிகளில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் இந்த பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அவற்றின் இடம் இருந்து மின் விநியோகம் பெறும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம் : மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், பிரீமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.

பீடம்பள்ளி துணை மின் நிலையம்:  கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம்,பள்ளபாளையம்.